#Breaking: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரிக்கை.

உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை தமிழகத்தில்  கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று ஆக்சிஜன் சிலிண்டரை பதுக்கினாலும் குண்டர் சட்டம் பாயும் என்றும் முதலான்ச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை பெற்று வருகின்றனர். அதில் சிலருக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்பது கடுமையான குற்றமாகும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க தொய்வின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

4 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

5 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

6 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

7 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

8 hours ago