அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 11 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் லாக்கர் சாவி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. வேறு பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தனர். 60 இடங்களில் சென்னையில் 3 , கோவையில் 4 இடங்களில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…