#BREAKING : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில் ஏன் தாக்கல் செய்ய உத்தரவிட கூடாது…? – உயர்நீதிமன்றம்

Published by
லீனா

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில்  தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது?

முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் காலமானார். நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணமடைந்தாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், குழு அமைத்தது.

இந்நிலையில், தொண்டன் சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், 2017-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை அந்த ஆணையம் ஒரு இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், அறிக்கையை பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 மாதங்களில்  தாக்கல் செய்ய ஆணையத்திற்கு ஏன் உத்தரவிட கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக 6 மாதங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…

14 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!

பாங்காக் :  தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…

30 minutes ago

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

60 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

1 hour ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

2 hours ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

2 hours ago