#BREAKING : சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள் – சஞ்சீவ் பானர்ஜி

Published by
லீனா

உயர்நீதின்றத்தில் இருந்து விடை பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்  பனர்ஜி அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம்  நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.

பின்னர், சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி பிரிவு உபச்சார விழா எதிலும் பங்கேற்காமல் தன்னுடைய காரிலேயே சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டார்.

இந்நிலையில், உயர்நீதின்றத்தில் இருந்து விடை பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப்  பனர்ஜி அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள்.

நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நீதிமன்றம் நலனுக்கானது. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போய் இருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத் துறைக்கு நன்றி. சொந்த மாநிலம் என்று  தமிழகத்தை 11 மாதமாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே  விடைபெறுகிறேன். ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றுகின்றீர்கள். அதை என்னால் தகர்த்தெறிய முடியவில்லை என்பது தான் வருத்தம். இனிய நினைவுகளுடன் புறப்படுகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பார்’ என எழுதியிருந்தார்.

Recent Posts

TNPL : “மேடம் இது அவுட் இல்லை”…டென்ஷனாகிய அஸ்வின்!

கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…

40 minutes ago

“இப்போ செய்தி இல்லை வியாழக்கிழமை குட் நியூஸ் வரும்”…ராமதாஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…

1 hour ago

மும்பை : கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 5 பேர் பலி!

மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து…

2 hours ago

ராஜ்ய சபா சீட் குறித்து இ.பி.எஸ் சொன்னது என்ன..? பிரேமலதா சொன்ன பதில்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத்…

2 hours ago

“கடும் விளைவுகளை சந்திப்பார்”! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…

4 hours ago

தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…

5 hours ago