இந்தியாவில் கொரோனா காரணமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அனைவரும் சமூக விலையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உள்ளதால் இவர் தனது பேக்கரியில் செல்ப் சர்வீஸ் இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார் .
இவர் கடையின் முன் பிரட் பாக்கெட்டை வைத்து விட்டு அதன் அருகில் ஒரு பெட்டியை வைத்துள்ளார். ஒரு பாக்கெட் பிரட்டின் விலை 30 ரூபாய் , பிரட் பாக்கெட்டை எடுப்பர்வர்கள் அந்த பெட்டியில் அதற்குரிய பணத்தை வைத்து விட்டு செல்லவும் என ஒரு பதாகையையும் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆளில்லாத கடையில் கூட முறையாக பணத்தை வைத்து விட்டு ரொட்டி எடுத்துச் செல்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக இதனை செயல்படுத்தி உள்ளதாக விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் மக்கள் முறையாக பணத்தை வைத்து விட்டு செல்வதாகவும் விக்னேஷ் கூறியுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…