150 கிடாய் வெட்டி, 300 கோழி அறுத்து கோலாகலமாக நடைபெற்ற பிரியாணி திருவிழா.! கூட்டம் கூட்டமாக கலந்துகொண்ட பக்தர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.
  • நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு, கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள், தேங்காய் மற்றும் பூத்தட்டு தலையில் சுமந்தபடி கோவிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வந்தனர்.

இவ்விழாவின் நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, பின்னர் கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

இதனை பெற்றிட மக்கள் போட்டிபோட்டு பிரியாணியை பெற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை சரிப்படுத்தி  பிரியாணியை விநியோகம் செய்ய உதவினர். பிரியாணி அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago