பஸ் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Published by
கெளதம்

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.

முதல் நாளான நேற்று, விடுப்பில் சென்றவர்கள், வாரவிடுமுறையில் இருந்தவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்களை வைத்து பேருந்தை இயக்கியதால், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், இரண்டாம் நாளான இன்று தலைகீழாக மாறி, பேருந்து சேவை பல் இடங்களில் முடங்கியுள்ளது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் அரசு இப்படி ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு வலியுறுத்தி, கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.  இதனிடையே, மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago