அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து.!

Published by
Ragi

கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்துவதன் காரணமாக சமுதாயம், அரசியல்,மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள்,கல்வி சார்ந்த விழாக்களை நடத்த வழங்கப்பட்ட‌ அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது .  ஆனால் கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது .

அதில் தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை வரும் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாயம், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் 100 பேர் வரை நவம்பர் 16-ஆம் தேதி முதல் பங்கேற்கவும், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவைகள் 10-ஆம் தேதி முதல் திறக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து எதிர்ப்புகள் நிலவி வந்த நிலையில், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு தற்போது பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுவதாகவும், கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும் மடடிசம்பர் 2-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும்,பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடரும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது .

மேலும் பண்டிகை காலங்கள் என்பதால் கடைகளுக்கு செல்லும் போது முககவசம் அணியாமலும்,சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உள்ளனர் . அது மட்டுமின்றி கொரோனா நோய் தொற்றானது இரண்டாம் அலையாக வெளிநாடுகளில் பரவி வரும் சூழலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் நிலவியுள்ளது . எனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமுதாயம், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்களை நடத்த வழங்கப்பட்ட‌ அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Published by
Ragi

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

5 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

5 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

6 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

6 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

10 hours ago