இன்றுடன் முடியும் வேட்புமனு தாக்கல் – புதிய வங்கி கணக்கு தொடங்க திண்டாடும் வேட்பாளர்கள்!

Published by
Castro Murugan

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், புதிய வங்கி கணக்குகளை தொடங்க வேட்பாளர்கள் திண்டாட்டம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்க கடந்த 28-ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வேகமாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவோடு புதிய வங்கி கணக்கிற்கான பாஸ்புக் கேட்கப்படுவதால் வேட்பாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வங்கி கணக்கு துவங்க அரை நாள் செலவிட வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்கள் உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது தங்கள் மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரம், மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்கள் உள்ளட்டவை தெரிவிக்க வேண்டும்.

மேலும், ஆதார், பான்கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 5 ஸ்டாம் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பித்து வருகின்றனர். இதே நேரத்தில் வேட்பாளர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதற்கான பாஸ்புக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்தால் கேட்டு கொள்ளப்படுகிறது.

இதனால் வேட்பாளர்கள் கடைசி நநேரத்தில் வங்கியில் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் புதிய வங்கி பாஸ்புக்கை மட்டும் மறுநாள் சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி வருகின்றனர். இதுபோன்று நெல்லை உள்ளிய சில மாநகராட்சியில் பல வேட்பாளர்கள் புதிய வாங்கி கணக்கு தொடங்க திண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளில் கூறுகையில், மாநகராட்சி தேர்தலை பொறுத்தளவில் வேட்பாளர்கள் ரூ.85 ஆயிரம் மட்டுமே தேர்தல் செலவுக்காக பயன்படுத்த வேண்டும். அதற்காக புதிய வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய வங்கி கணக்கு என்றால், அது குழப்பத்தை உண்டாக்கும். இருப்பினும் சில வேட்பாளர்களுக்கு பழைய வங்கி கணக்கு பாஸ்புக்கை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

6 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

43 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago