ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.மேலும் இவரது தலைமையில் ஒரு அணி இருந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் அதிமுகவில் இரு அணிகள் உருவாகியது.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி ,எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகள் பிரிந்தது.தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் அவரது அணியும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தனர்.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
பன்னீர் செல்வம் பிரிந்த சமயத்தில் தான் அவரது அணியில் இருந்தவர் மாஃபா பாண்டியராஜன்.அப்பொழுது ஆர் .கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.அந்த சமயத்தில் சவப்பெட்டியில் தேசியக்கொடியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாண்டியராஜன்.தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பெயரில் பாண்டியராஜன் தமிழ்செல்வி,குப்பன் ஆகியோர் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கினை எல்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.எனவே தற்போது அமைச்சராக உள்ள பாண்டியராஜன் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டியராஜன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டாரே தவிர, பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…