ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.மேலும் இவரது தலைமையில் ஒரு அணி இருந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் அதிமுகவில் இரு அணிகள் உருவாகியது.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி ,எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகள் பிரிந்தது.தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் அவரது அணியும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தனர்.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
பன்னீர் செல்வம் பிரிந்த சமயத்தில் தான் அவரது அணியில் இருந்தவர் மாஃபா பாண்டியராஜன்.அப்பொழுது ஆர் .கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.அந்த சமயத்தில் சவப்பெட்டியில் தேசியக்கொடியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாண்டியராஜன்.தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பெயரில் பாண்டியராஜன் தமிழ்செல்வி,குப்பன் ஆகியோர் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கினை எல்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.எனவே தற்போது அமைச்சராக உள்ள பாண்டியராஜன் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டியராஜன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டாரே தவிர, பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…