நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்! 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை.. அமைச்சர் துரை முருகன் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே ஹெல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.  நேற்று நடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு அடுத்த 16 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்ககாவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. நேற்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம்  மற்றும் கர்நாடக சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்தின் சார்பில் 15 நாட்களுக்கு தினசரி 13000 கன அடி நீர் திறக்க வலியுறுத்தப்பட்டது.

நீர்பற்றாக்குறை காரணமாக நீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. வரும் 16 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு, காவிரி ஒழுங்காற்று குழு  பரிந்துரை செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை கூடுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சமயத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாளை நடக்க உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.

கடந்த 18 நாட்களில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நமக்கு 4.21 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது. மேலாண்மை ஆணையம் கூறியதை ஏற்று கர்நாடகா தொடர்ந்து தண்ணீரை திறந்து வருகிறது என என்றார். இருப்பினும், உரிய நீரை காவிரியில் இருந்து கர்நாடக அரசு திறக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

14 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

51 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago