Cauvery: காவிரி விவகாரம்! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு செப்.21ல் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான  வழக்குகள் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கவாய், மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. அதாவது, காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், பி.கே.மிஸ்ரா அமர்வில் தமிழக அரசு முறையிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு முறையீட்டை தொடர்ந்து காவிரி தொடர்பான வழக்குகள் வரும் 21ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

காவிரி வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் நரசிம்மா இன்று விடுப்பில் உள்ளதால் வழக்கை இன்று விசாரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த வாரம் விடுப்பில் செல்ல உள்ளதாக நீதிபதி கவாய் தகவல் தெரிவித்தார், 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார். இதனால், காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட, நிலையில் நீதிபதிகள் விடுப்பு காரணமாக வழக்கு விசாரணை செப்.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடாக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

14 minutes ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

50 minutes ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

3 hours ago

அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசக்கூடாது – அட்வைஸ் கொடுத்த அமித்ஷா!

மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

4 hours ago

“ஐயா நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லுவாங்க..”- ஜி.கே.மணி பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

4 hours ago

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

5 hours ago