காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! தனி தீர்மானத்தில் முதல்வர் கூறிய முக்கிய குறிப்புகள்…

Published by
மணிகண்டன்

இன்று சட்டப்பேரவையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த ஜூன் நிலவரப்படி மேட்டூர் அணையில் 69.7 டிஎம்சி தண்ணீர் இருக்கும் போதே குருவை சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்தோம். அதனால் நீர் கடைமடை வரை சென்றது. ஆனால் குருவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த சமயத்தில் செயற்கையான நீர் நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது என குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மேற்கொன்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில், கடந்த ஜூன் மாதம் பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு 9.19 TMC தண்ணீர் திறக்க வேண்டும் என்ற நிலையில் 2.2 TMC  தண்ணீர் அளவை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட்டது. இது தொடர்பாக கடந்த 3.7.2023 அன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீர் அளவை திறக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

காவிரி விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.! 

அதன் பிறகு, மீண்டும் 5.7.2023 அன்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து வலியுறுத்தினார். தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியாது என கார்நாடக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 19.07.2023 அன்றும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து  காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினார். இதன் பின்பும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் இருந்து வருகிறது.

கர்நாடகாவில் உள்ள 5 அணைகளில் 30 ஆண்டுகள் சராசரியில் 84 சதவீத தண்ணீர் இருக்கிறது. ஆனால் பிலிகுண்டுலுவில் 13 சதவீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காவிரி மேலாண்மை வாரியம் கடந்த ஜூலை 25ஆம் தேதி கபினி அணையில் இருந்து அடுத்த 6 நாட்களுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று மையம் உத்தரவிட்டது. அதனை அடுத்து ஜூலை 31இல் நடைபெற்ற காவிரி ஒழுங்கற்று மையத்திடம், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு நான் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 11 முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 11 அந்த உத்தரவானது 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசு உறுப்பினர்கள் காவிரி ஒழுங்காற்று மைய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தமிழகத்திற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும் 24.8 TMC தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தமிழக அரசு மனு ஒன்று தாக்கல் செய்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. அதன் பிறகு திமுக எம்பிக்கள் மொத்தமாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

கடந்த  செப்டம்பர் 29ஆம் தேதி கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என்று காவேரி மேலாண்மை வாரியம் கூறியது. ஆனால் அதனை விட குறைவான அளவு தண்ணீரை தான் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட்டது.

அடுத்து 11.10.2023 அன்று நாளை மறுநாள் மீண்டும் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்து சட்ட ஆலோசகர்களை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். 1.6.2023 முதல் 3.10.2023 வரையில் 46.1 TMC தண்ணீர் பெறப்பட்டுள்ளது.  இதன் மூலம் 6 லட்சம் ஏக்கர் அளவில் குருவை சாகுபடி நடைபெற்றுள்ளது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன் என காவிரி நதிநீர் பங்கீடு தனித்தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

25 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

10 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago