தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர்,
சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அகமதாபாத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள…
குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா…
குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா…
குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு…
குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட…
அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேகனிநகர்…