2 ஊழியர்களுக்கு கொரோனா.! சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடல்!

சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையமான AAI அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகம் ஜூன் 7 வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் மே 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகமான AAI-இல் வேலைபார்த்து வந்த 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அலுவகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக ஜூன் 7 வரையில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025