சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள் நாளை ஓய்வு பெறுவுள்ளதை முன்னிட்டு, இன்று மாலை அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது.
1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நீதிபதி கிருபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் இவருக்கு 62 வயது பூர்த்தியாக உள்ளதால் இவர் நாளை ஓய்வு பெறுகிறார். இவருக்கு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…