கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார்.
அதில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த பணிகள் 2026இல் முற்றிலுமாக நிறைவு பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான புறவழி தடத்திற்கான சேவை 2025இல் தொடங்கப்படும். மேலும், தாம்பரம் வழியே விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேரூந்துநிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.
மேலும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக்கூறுகள் கொண்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும். மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் அனைத்தும் அனைத்தும் 2026-க்குள் நிறைவடையும் என தனது காகிதமில்லா நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…