'செலவுக்கு பணம் தரவில்லை அதனால் அடித்து கொன்றோம்!' சென்னை தொழிற்சாலை முதலாளி கொலையில் திடுக் திருப்பம்!

Published by
மணிகண்டன்

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார் பிரபாகரன். இவர், அந்த தொழிற்சாலையை 10 ஆண்டுகளாக நடத்திவந்துள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் ஆகி 4 மாத குழந்தை உள்ளது.
இவர் எப்போதும் தனது தொழிற்சாலைக்கு வந்த பின் மனைவியிடம் போன் பேசுவது வழக்கம். ஆனால் சமத்துவதன்று அவர் போன் செய்யவில்லை. அன்று இரவு வீட்டிற்கும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரபாகரன் வீட்டார். போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் தொழிற்சாலைக்கு வந்த போலீசார், பூட்டியிருந்த தொழிற்சாலையை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரபாகரன் கம்பியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அங்குள்ள சிசிடிவி காமிராவை ஆராய்ந்ததில் தொழிற்சாலையில் இருந்து இருவர் தப்பிஓடுவது போல இருந்த்தது. இதனை அடுத்து தப்பியோடியவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சில நாட்களுக்கு முன்னர்தான் வேலைக்கு சேர்ந்தனர் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களை பீகார் சென்று தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் ‘ பிரபாகரனிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால், இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொன்றுவிட்டு, அவரிடம் இருந்து 500 ரூபாயையும், செல்போன், பீரோவில் இருந்த 1 லட்சம் பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்றதாகவும்’ வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அந்த கொலையாளிகளில் ஒருவன் பெயர் ரோஷன், இன்னொருவன் 17 வயது பையன் ஆவான்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

4 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

6 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago