இரவு ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Published by
Rebekal

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடியாக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது போலவே சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவு நேரத்தில் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது எனவும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதிலும் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் 434 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரயில்களும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago