“மிதக்கும் சென்னை;திமுக அரசுதான் காரணம்” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Published by
Edison

சென்னை:அதிமுக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில்,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அவர்கள் 3-வது நாளாக ஆய்வு செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்தார்.அதேபோல, இன்று யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி  ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில்,திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் பல இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று பார்கவில்லையென்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த திமுக அரசு விரைந்து செயல்பட்டு எங்கெல்லாம் தாழ்வான பகுதி உள்ளதோ அந்த பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறன்.

3 நாட்கள் ஆகியும் இன்னும் மழைநீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு கிடைக்காமல் உள்ளது.மின்சாரம்,மருத்துவ வசதி கிடைக்காமல் உள்ளது.குறிப்பாக குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் உள்ளது.

ஆகவே,திமுக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து செயல்பட்டு  மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,”அதிமுக அரசு அமைந்த பிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.புரட்சி தலைவி அம்மா இருந்தபோதும்,மறைவுக்கு பின்னரும் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளதோ? அதைக் கண்டறிந்து,அந்த பகுதியில் வடிகால் செய்து கொடுத்த அரசு அம்மாவின் அரசு.

மேலும்,மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக உலக வங்கி,ஜெர்மன் வளர்ச்சி வங்கி,தமிழக அரசின் நிதி,மாநகராட்சி நிதி ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக, ரூ.1385 கோடி மதிப்பில் அடையாறு – கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வசதி 406 கி.மீ க்கு செய்து முடித்த அரசு அம்மாவின் அரசு.அதனால்தான்,கனமழை பெய்தும் கூட தற்போது அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உள்ளது”,என்று தெரிவித்தார்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago