முக்கிய தலைவர் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Default Image

கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவா் ச.இராமநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,ஈடுசெய்ய முடியாத ச.இராமநாதன் அவர்களது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், இந்நாள் தலைவருமான, கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன்.

பல்வேறு கல்வி நிலையங்களை நிறுவிய அவர், 1983-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், 2000-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை செயலாளராகவும் பணியாற்றியவர்.

பின்னர், 2021-ஆம் ஆண்டு முதல் மீண்டும் தலைவராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் முதலிய விருதுகளைப் பெற்றவர்.

ஈடுசெய்ய முடியாத அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். “,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi