கடந்த மாதம் 17மற்றும் 18-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்தூக்குடி , நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது தான் தூத்தூக்குடி , நெல்லை மாவட்டங்கள் பழைய நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது சென்னை- திருச்செந்தூர் ரயில் சிக்கிக்கொண்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தண்டவாளத்தின் வழியாக தாதன்குளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வழங்கிய கிராம மக்கள் அவர்களை செய்துங்கநல்லூர் கிராமத்திற்கு பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.
ரயிலில் பயணித்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்து பத்திரமாக வழிஅனுப்பி வைத்த கிராம மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.15,000 தொகையை வெகுமதியாக அளித்தனர். அந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாதன்குளம் கிராம மக்கள் கொடுத்தனர். அதன்படி, தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் ரூ.15,000 தொகையை தாதன்குளம் கிராம மக்கள் வழங்கினர். அப்போது தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பாலக்காடு ரயிலை தாதன்குளத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…