அதிரடி நடவடிக்கை -“காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

அவசர காலங்களில் காவல்துறை சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

தமிழகத்தில் பொது மக்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவி மற்றும் சேவையை பெறும் வகையில் “காவல் உதவி” செயலியை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் செயலியில் தகவல் அளித்தால் துரித சேவை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அவசர காலங்களில் பெண்கள் உள்ளிட்டோர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதன் மூலம், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி அவசர கால கோரிக்கை / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசர கால கோரிக்கைகள் / புகார்களை நேரடியாக தேர்வு செய்து உரிய விவரங்களுடன் புகார் தொடர்பான படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றும் செய்து, கட்டுப்பாட்டு அறையின் மூலமாக துரித சேவை பெறலாம்.

இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) அவசரமற்ற காலங்களில் பயனாளர்கள் Whatsapp / Google Map வாயிலாக, பணி / இதர பயணங்கள் செல்லும் பொழுது, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர்கள் / நண்பர்கள் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்காவல் உதவி செயலியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக “அவசரம்” உதவி பொத்தான் – பெண்கள் மற்றும் இதர பயனாளர்கள் அவசர காலங்களில் இச்செயலியில் உள்ள சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் குறுகிய அளவிலான வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு துரித சேவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மகளிர், சிறார்கள், முதியோர் உரிய விவரங்களுடன் செயலி மூலம் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் உதவி செயலியை கூகுள் பளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார், போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்கும் பொருட்டு “Dial-100” செயலியானது காவல் உதவி செயலின் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

57 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago