முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம்

இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பயணத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர்.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.பின்னர் அங்கு ரூ.243 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் முதலமைச்சர் .
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025