மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டியிருந்தார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, முதலாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. என்.சங்கரய்யாவுக்கு சுதந்திர தினத்தன்று 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். என்.சங்கரய்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது இல்லத்திற்கே சென்று விருதை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. என்.சங்கரய்யாவுக்கு விருது வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலினுடன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் விருது வழங்கப்பட்டது.
மேலும், என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு சான்றுதலும் வழங்கப்பட்டது. விருதுடன் அளித்த ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு என்.சங்கரய்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…