#Breaking:ஒலிம்பிக்கில் பதக்கம் பெரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

Published by
Edison

ஒலிம்பிக்கில் பதக்கம் பெரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையில்,தற்போது குறைந்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை நேரு விளையாட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

அந்த உரையில் முதல்வர் கூறியதாவது:”விளையாட்டு போட்டிகளுக்கு டீம் ஸ்பிரிட் மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஏனெனில்,வீரர்கள் ஒரே நோக்கில் இருந்தால்தான் முழு வெற்றியை பெற முடியும்.விளையாட்டு துறைக்கு அரசு என்றுமே துணை நிற்கும்.”,என்றார்.

இதனைத் தொடர்ந்து,ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி,வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி,வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்”,என்று அறிவித்துள்ளார்.

இதனையடுத்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

Published by
Edison

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

31 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago