[Image Source : twitter/@sunnewstamil]
ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பயன்கள் வழங்குதல் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழா நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பின், “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அடையாளமாக சுமார் 15 பேருக்கு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1 லட்சம் பேருக்கு வழங்குவதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயருகிறது.
மேலும், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…