ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பயன்கள் வழங்குதல் திட்டத்தை தொடங்கி  வைத்தார் முதல்வர். 

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழா நடைபெற்று வருகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதன்பின், “ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி” விழாவில், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அடையாளமாக சுமார் 15 பேருக்கு ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1 லட்சம் பேருக்கு வழங்குவதன் மூலம் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயருகிறது.

மேலும், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

8 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago