#TN Assembly:தமிழக சட்டப்பேரவையில் இன்று…புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சட்டப்பேரவையில் இன்று கைத்தறித்துறை மற்றும் வணிக வரித்துறை  மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,மானியக்கோரிக்கை மீது கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குறிப்பாக,அரியலூர் சிமெண்ட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவுள்ளனர். குறிப்பாக போலி பட்டாக்கள் பதிவு செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்.

மேலும்,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அனுமதி கோருவார் என்றும்,அதே சமயம்,தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவுக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுமதி கோர உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,தமிழக சட்டப்பேரவை 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago