கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை.!

Published by
Muthu Kumar

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில், 15 மாதங்களில் கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உரை.

முதல்வர் உரை:

சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன், 230 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்த பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைந்துள்ள இம்மருத்துவமனை வெறும் 15 மாதங்களில் கட்டி முடித்துள்ளோம்.

15 மாதங்களில் கட்டப்பட்டுள்ளது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015இல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், இன்னும் இரண்டாவது செங்கல் கூட எடுத்துவைக்காத நிலையில் 15 மாதங்களில் கலைஞர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். கலைஞர் என்றால் கிங் தான், கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் தான் அமைந்துள்ளது.

உலகத்தர மருத்துவமனை:

அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய உலக தரத்தில் 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்தமாதம் திறக்கப்படவுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜனாதிபதியை தடுத்து விட்டனர்:

மருத்துவ கட்டமைப்பில் முதல் மாநிலமாக நம் தமிழ்நாடு திகழ்கிறது, குடியரசுத்தலைவர் இந்த கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை திறக்கவேண்டிய நிலையில் அவரை திறக்கவிடாமல் தடுத்துவிட்டனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.40 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக கூறிய முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ திட்டங்கள் தற்போதும் தொடர்வதாக கூறினார்.

கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி:

மேலும் வேலூர் அருகே சிகிச்சைக்கு வருபவர்கள் தங்குவதற்காக 250 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சத்துவாச்சேரி அருகே சிகிச்சைக்கு வருபவர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் 2 ஹேக்டேரில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

31 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

52 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

52 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago