முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்பாக நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்திற்கு ” பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என பெயர் சூட்டி பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அன்பழகனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பேராசிரியர் க.அன்பழகன் திமுகவில் 1977 முதல் 2020 வரை பொதுச் செயலாளராக இருந்தார். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் கல்வித்துறை, நிதித்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…