சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி முதல் அந்த ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. அதன் படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகள் திறந்தன.
இதே போல நாளை முதல் தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.
இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், சேலத்தை சேர்ந்த ஆகாஷ், விக்டோரியா, ஆதாரஸ், சபரி, சுப்ரியா ஆகிய சிறார்கள் சேலத்தில் இருக்கும் முதல்வர் வீடு நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். அவர்கள் கையில் குடியை விடு, படிக்க விடு எனும் வாசகம் அடங்கிய பதாகைகள் இருந்தன. அவர்கள் சுமார் 30 கிமீ நடைபயணம் மேற்கொண்டனர். ஆனால், அவர்களை முதல்வர் வீடு அருகே ஓ.எம்.ஆர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…