கோவைமாவட்டம், ராக்கிப்பளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலம்மாள். இவர் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர், அக்கூட்டத்தில், தான் சுயமாக சம்பாதித்த நிலத்தினை மகன்களுக்கு பத்திரப்பதிவு செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
நிலங்களை பெற்றுக் கொண்ட மகன்கள் அதன்பின் என்னை முறையாக பார்த்துக் கொள்வதில்லை என்றும், முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து தர வேண்டுமென மனு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மேற்கொண்ட நடவடிக்கையில், பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23-ன் படி, கணவரை இழந்து வாழ்ந்து வரும் பாலம்மாள் தன்னுடைய மகன்களுக்கு எழுதிக்கொடுத்த செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாலம்மாளின் மகன்களாகிய சசிகுமார், முருகானந்தம் மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பிழைகளும், அவருக்கு மாதம் தலா ரூ.3,000, அவர் உயிரோடு இருக்கும் வரை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…