சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்று மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.அங்கு உள்ள கடற்கரை கோயிலின் சிறப்பை விளக்கினார் பிரதமர் மோடி.மேலும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் இருநாட்டு தலைவர்களும் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில் இன்று கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.இதற்கு பின் இரு தலைவர்கள் முன்னிலையில் இந்திய – சீன உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோவளத்தில் தமிழக கலைஞர்களின் கைவினைப்பொருட்களை சீன அதிபர், பிரதமர் மோடி பார்வையிட்டனர்.தொடர்ந்து சீன அதிபர் உருவம் பொறித்த சிறுமுகை பட்டை, சீன அதிபருக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி .மேலும் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த சீன பீங்கான் தட்டை பிரதமர் மோடிக்கு, பரிசாக கொடுத்தார், சீன அதிபர் ஜின்பிங்.
இறுதியாக பயணத்தை முடித்த சீன அதிபர் ஜின்பிங்கை ஓட்டலில் இருந்து வழியனுப்பி வைத்தார் பிரதமர் மோடி.2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.சீன அதிபரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் வழியனுப்பிவைத்தனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…