கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் சாக்லேட் திருவிழா.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் தொடங்கி உள்ள சாக்லேட் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
  • கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி, தமிழி போன்ற எழுத்துகல்ள் சாக்லேட் திருவிழாவில் பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தனி ருசி தான். இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும்போது இந்த சாக்லேட்டை தவறாமல் வாங்கி செல்வார்கள். அதேபோல் ஆண்டுதோறும் ஊட்டியில் சாக்லேட் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சாக்லேட் திருவிழா தற்போது தொடங்கியுள்ளது.

தனியார் நிறுவனத்தின் சார்பாக 15 நாட்கள் நடைபெறும் இந்த சாக்லேட் திருவிழாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விதமான சாக்லேட் தயாரிப்புகள் காட்சிகளுக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் 120 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட 2020 வடிவிலான சாக்லேட் உருவமும் பார்ப்போரை கவர்ந்துள்ளது. பின்னர் கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி, தமிழி போன்ற எழுத்துகல்ள் சாக்லேட் திருவிழாவில் பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அத்துடன் மூங்கில் அரிசி, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 தானியங்களை கொண்டு உருவாக்கபட்ட சாக்லேட்டுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஒரு கிலோ 300 ரூபாய் முதல் கிலோ 3500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லேட் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உதகைக்கு சுற்றுலாவிற்கு வரும் அனைவர்க்கும்இந்த திருவிழாவும் ஒரு பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

20 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

51 minutes ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

1 hour ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

2 hours ago

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…

2 hours ago

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…

2 hours ago