இன்று நம் பாரத நாடு முழுவதும், 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார்.
அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி மக்களிடையே முக்கிய அறிவிப்புகள் பற்றி உரையாற்றினார். முதலமைச்சராக மூன்றாவது முறையாக கோட்டையில் கொடியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் கூறுகையில், ‘ சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். கங்கை ஆறு மறுசீரமைப்பு போல காவேரியை மறு சீரமைப்பு செய்ய நடந்தாய் வாழி காவேரி எனும் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்படும் எனவும்,
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வேலூரை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமாகவும், திருப்பத்தூரை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டம் என மூன்று மாவட்டமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக தற்போது திகழ்வது போல, நீர் மிகை மாநிலமாகவும் விரைவில் மாறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்க கூடாது எனவும் கூறினார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…