மிக்ஜாம் புயல்.! திமுகவினருக்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) தலைநகர் சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இலலாத அளவுக்கு மழைபொழிந்து, கடந்த 2015இல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் மிக தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களை மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மீட்பு படையினர் படகுகள் மூலம் அழைத்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

சென்னையில் நாளை 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் – அமைச்சர் அறிவிப்பு..!

இருந்தும் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற வேண்டிய சூழல் நிலவுகிறது. இது குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றும்,

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் திமுக தொண்டர்களுடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மீட்பு பணிகளில் ஈடுபட முன்வர கோரி திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

11 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

48 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

13 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago