தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிவிப்பு.
கடந்த மாதம் 21-ஆம் தேதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தான் அரசியலுக்கு வருகிறேன் என்று விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அறிவித்துள்ளார். சகாயம் அரசியல் பேரவை போட்டியிடும் 20 தொகுதிகளின் 10 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். சகாயம் அரசியல் பேரவையுடன் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் 1 தொகுதிகளிலும் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால் புதிய கட்சி, புதிய சின்னம் பெற நேரம் இல்லாத சூழலில், கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகளின் சின்னத்தில் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சி குறித்த முழுமையான நடவடிக்கைகள் இருக்கும் என்றும் வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…