மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்…!

Published by
லீனா

மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன்.

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆக.14 ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐந்து வாரங்களுக்கு மேலாக மீராமிதுன் சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதனை தொடர்ந்து, மீராமீதுநின்  அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாம் பட்டியலினத்தை சேர்ந்தவர் தான். அவரது பெற்றோர் பட்டியல் இனத்தவர் தான். இவர்கள் கிறிஸ்தவ மதம் மாறிவிட்டார். மேலும் இவர் ஒரு மாதத்திற்கு மேலாக அவர் சிறையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு சமுதாயம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி இவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவரும் 5 வாரங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும் இருவரும் ரூ 10,000 இரு நபர் பிணை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மறு உத்தரவு  வரும் வரை இருவரும் காவல் நிலையத்தில் 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தலைமறைவாக கூடாது என்று கோரி, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago