கொரோனா இல்லாத என் குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் – கோவையில் பேனர்!

Published by
Rebekal
கொரோனா இல்லாத எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என மாநகராட்சிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அரசு மக்களை இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள ஹோப் காலேஜ் எனும் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அந்த குடும்பத்தின் முன் வீட்டின் முன்புறம் தகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டினர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் இது குறித்து சோதனை மேற்கொண்ட பொழுது, அவர்கள் நால்வருக்குமே கொரோனா இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் கோவை மாநகராட்சியை கண்டித்து வினோதமான முறையில் பேனர் வைத்துள்ளனர். அதில் கொரோனா இல்லாத 4 பேருக்கு இருக்கு என்று முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனக் கூறி தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழையும் கீழே அச்சடித்து பேனர் ஒன்று வீட்டின் முன்பாக மாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் ஒருவர் கூறுகையில், கொரோனா  உறுதி செய்யப்பட்டவர்கள் 4-5 தினத்திற்கு பின்பு மறு பரிசோதனை செய்தால் கொரோனா நோய் தொற்று இல்லை என்று வருவது இயல்பானது தான் எனவும், இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago