விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணி முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தற்போதைய நிலவரப்படி,திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில்,கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில்,திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகள் பெற்று,தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலனை தோற்கடித்துள்ளார்.
இதனையடுத்து,இரண்டு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ வாக இருக்கும் விஜயதரணி தற்போது மூன்றாவது முறையும் அதிக வாக்குகள் பெற்று தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக விஜயதரணி,கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சரியாக பணி செய்யவில்லை மற்றும் தொகுதி பக்கம் செல்வதில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதுமட்டுமல்லாமல் விஜயதரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினரே போராட்டம் நடத்தினர்.மேலும்,விஜயதரணி பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால்,இதற்கு மறுப்புத் தெரிவித்த விஜயதரணிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது.இந்த வாய்ப்பினை விஜயதரணி பயன்படுத்திக்கொண்டார்.மேலும்,மக்களின் பாஜக எதிர்ப்பு மனநிலையும் மற்றும் திமுக கூட்டணி பலமும் விஜயதரணிக்கு பலமாக அமைந்தது. அதனால்,விஜயதரணி தொடர்ந்து 3 வது முறையாக வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…