கொரோனா 3வது அலையில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தல்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்க தவறிய மத்திய, மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு தலைமையில் வந்தது. அப்போது, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா 3வது அலையில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதனிடையே, அந்த மனுவில், கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு அபதாரம் விதிக்கவும், கொரோனா ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடை பிடிக்குமாறு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…