விளாத்திகுளத்தில் ஒரே நாளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் இன்றுவரை குறையாத நிலையில் தூத்துக்குடியிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் இருந்த வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளத்தில் உள்ள 104 வியாபாரிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.
அவர்கள் தங்களது சளி மாதிரிகளை வழங்கி சென்ற நிலையில் தற்போது இதன் முடிவு வெளியாகியுள்ளது. பரிசோதனைக்கு வந்த 104 வியாபாரிகளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் பகுதியில் இயங்கி வந்த அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேருக்கு மறைவாக இருந்த கொரோனா தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…