அதிர்ச்சி.. கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா!

Published by
Surya

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அங்கு 200 பெரிய மொத்த வியாபார கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. சந்தைக்கு காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், அங்கு வரும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

மேலும், கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வரும் வியாபாரிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த 22 நாட்களில் 2,800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையில் தற்பொழுது கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியானது, மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago