“நவம்பரில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Published by
Surya

நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் மண்டலம், என்எஸ்கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாகவும், சென்னையில் ஒருசில மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறினார்.

மேலும் சென்னையில் 100 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதில் 10 பேருக்கும் கீழே தான் பாதிப்பு இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைந்துவிட்டதாகவும், இதுவரை கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.3.9 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் இதுவரை 30 லட்சம் பேர் வீட்டுத் தனிமையை முடித்துக் கொண்டுள்ளனர். தற்போது வரை 2.25 லட்சம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு 50,000க்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக கூறிய அவர், பரிசோதனை விகிதம் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் 9% இருப்பதாகவும், அதனை 5% குறைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியமாக இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

13 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

59 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago