சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் சாதாரணமாக வெளியில் சுற்றும் பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடக் கூடிய அமைச்சர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை அனைவருமே அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல அதிமுக, திமுக எம்எல்ஏ க்களும் கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்எல்ஏ பி.வி.பாரதி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி பரிசோதனை மேற்கொண்ட எம்எல்ஏ சீர்காழி அவர்களுக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?
June 26, 2025
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025