தமிழகத்தில் கொரோனா பணிகளில் ஈடுபடும், எம்பிபிஎஸ் 3,4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள்.
தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கண்காணிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, எம்பிபிஎஸ் பயிலும் 3,4-ம் ஆண்டு மாணவர்களை உரிய கண்காணிப்பின் கீழ், கொரோனா பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம், 3 மற்றும் 4-ம் ஆண்டு முடித்த மருத்துவ மாணவர்கள் 7,000 பேரை கொரோனா பணிகளில் ஈடுபடுத்துமாறு, அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி மருத்துவ மாணவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவர். மருத்துவமனைகளில் பணிகளை ஒருங்கிணைக்கும் செயல்களிலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதல்கட்ட ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளார்கள். மேலும் மாணவர்கள் 7,000 பேரும் கொரோனா வார்டுகளில் நேரடியாக பணியமர்த்தப்படமாட்டார்கள் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…