நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார்.
தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் என கூறி தயாராகிவிடுங்கள் என தெரிவித்துள்ளார். ஒருபக்கம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதால் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று திமுக ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…