கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணமாக உலக முழுவதிலும் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதுடன்,மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவிய இந்நோயால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல விழிப்புணர்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழக முதல்வரின் உத்தரவு படி தமிழகம் முழுவதும்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்ட எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.இவ்வாறு மக்கள் தொகை அதிக கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்பட்டுத்த அரசுகள் தங்களது முழு முயற்சியில் இறங்கினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை,பொதுமக்கள் பலர் வீரியத்தினை அறிந்து செயல்பட்டு வருகின்றனர்.சிலர் இன்னும் விழிப்புணர்வின்றி செயல்படுகின்றனர்.இதனையும் கட்டுபடுத்த சென்னை காவல் ஆணையர் ஒரு கடுமையான உத்தரவினையும்,அறிவுறுத்தலையும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார்.அதன்படி தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பொதுமக்கள் நலன், பாதுகாப்பு, பொது அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த உத்தரவினை பிறப்பித்ததாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…