கொரோனாவை கட்டுப்படுத்த தனியார் மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அரசுடன் கைக்கோர்த்து பணியாற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்றே இந்தியாவில் தலைத்தூக்க துவங்கி உள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த அதிதீவிர நடவடிக்கை தேவை என்று கூறிவரும் நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் இதே நிலைத் தொடர்ந்தால் எப்ரல் மே மாதத்தில் 13 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முனைப்போடு விரைவாக செயல்படுத்தி வருகிறது.தற்போது நாட்டு மக்களுக்கு வைரஸ் பரவுவதை தடுக்க தனியார் மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் அரசுடன் கைக்கோர்த்து பணியாற்ற வாருங்கள் என்று மத்திய அரசு அழைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…