கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.இந்த பரிசோதனையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சேர்ந்த பொன்னுசாமி (46) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஈஷா அனிபாவுக்கு(3) என்ற குழந்தைக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது .
இதையெடுத்து 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு வார்டில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. முடிவு வந்த பிறகு தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா..? இல்லையா…? தெரியும் என சிறப்பு மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…